இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் 3 நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று புதுக்கோட்டையில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். நாளையுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
மாங்கோட்டை பகுதியில் விஜயகாந்த் பேச்சைக் கேட்க பெருங்கூட்டம் கூடிவிட்டது. அவரும் தனது ஸ்டைலில் பேசி மக்களிடம் ஆதரவு கேட்டார்.
இந்நிலையில் கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற அவர் வாகனத்துடன் தேர்தல் ஆணையம் அனுமதித்ததைவிட அதிக அளவிலான கார்கள் சென்றுள்ளன. இது தவிர தேர்தல் விதிகளை மீறி அதிக அளவில் கட்சி கொடிகளும், பேனர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து விஜயகாந்த் மீது ஆலங்குடி போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவும், இதிலாவது திராணியை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications