கொட்டும் மழையிலும் பெரியாறு அணையில் துளை அடைக்கும் பணி மும்முரம்
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கேரள வனத்துறை தடைக்கு பின்னர் கொட்டும் மழையிலும் துளைகளை அடைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
பெரியாறு அணையின் துளைகளை அடைக்க கொண்டு செல்லப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை வல்லக்கடவு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தியது கேரள அரசு. இதன் பின்னர் கேரள அரசு துளைகளை அடைக்க அனுமதி வழங்கியதால் மீண்டும் சிமெண்ட் மூட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
3 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட சிமெண்ட் மூட்டைகள் மூலம் துளைகள் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை ஒரு துளையை அடைத்திருக்கின்றனர்.
கடந்த 3 நாள்களாக, அணைப் பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இருப்பினும், இரவு பகலாக தொடர்ந்து துளையை அடைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்கான வந்த உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழுவினர் அணையில் துளைகளைப் போட்டு மண் பரிசோதனை செய்தனர். இந்தத் துளைகளை அடைக்காமல் விட்டால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் துளைகளை அடைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது












Click it and Unblock the Notifications