For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தாவின் குரலையும், ரத்தத்தையும் 'டெஸ்ட்' செய்ய உத்தரவு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கில் அவருக்கு ரத்தம் மற்றும் குரல் பரிசோதனை நடத்த கர்நாடக மாநிலம் ராமநகரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற சிடி விவகாரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு ஏற்கனேவ 6 முறை கர்நாடக சிஐடி போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும் நித்தியானந்தா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிஐடி போலீஸார் ராமநகரம் கோர்ட்டை நாடினர்.

இதையடுத்து நித்தியானந்தா இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற சிடியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இந்த சிடியை லெனின் கருப்பன் என்கிற நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்தான் தயாரித்து வெளியிட்டார். இந்த சிடி விவகாரம் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில்தான் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English summary
Karnataka's Ramanagaar court has ordered for a Voice test to Nithyanantha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X