புதுக்கோட்டை எஸ்.பி.யாக ஆர்.தமிழ்சந்திரன் மீண்டும் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலின் போது மாற்றம் செய்யப்பட்ட ஆர்.தமிழ்ச்சந்திரனை மீண்டும் புதுக்கோட்டை எஸ்.பி.யாக தமிழக அரசு நியமித்துள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தல் கடந்த 12 ம் தேதி நடைபெற்றது. தேர்தலையொட்டி புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த ஆர். தமிழ்ச்சந்திரனை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த மாதம் 24ம தேதி தமிழ்ச்சந்திரன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
தற்போது தேர்தல் முடிந்து புதுக்கோட்டை எம்.எல்.ஏ.வாக அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பதவியும் ஏற்றுவிட்டார். இந்நிலையில் தேர்தலுக்காக புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட சுதாகர் மீண்டும் சென்னை அடையாறு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆர். தமிழ்சந்திரன் மீண்டும் புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த சுதாகர், சென்னை பெருநகர, அடையாறு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ்ச்சந்திரன், புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications