விழுப்பும் அருகே போலி சாமியாரைப் பிடித்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்த போலி சாமியாரை பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திருப்பாலப்பந்தல். அங்கு பழமையான மத்தியநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து, பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் ஒருவர் வந்து இந்த கோவிலை புதுப்பித்து, பல்வேறு பரிகார பூஜைகள் நடத்தப் போவதாக கூறி கோவிலில் தினசரி பூஜைகள் செய்து வந்தார். இதில் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கோவிலுக்கு வரும் பகத்தர்கள் கூட்டம் திடீரென குறைந்து போனதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாமியார் காணாமல் போனார். இந்த நிலையில் அரக்கோணத்தை அடுத்த அணைக்கட்டாபுத்தூர் கிராமத்தில் உள்ள ஏகாம்பரர் உடனமர் காமாட்சியம்மன் கோவிலை திருப்பணி செய்வதாகவும், அங்கு நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் வருவதாகவும் கூறி அழைப்பிதழ் அச்சடித்து, மக்களை நம்ப வைத்து பணம் பறித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த திருப்பாலப்பந்தல் கிராம மக்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அணைக்கட்டாபுத்தூர் கிராமத்திற்குச் சென்று சாமியாரிடம் நைசாகப் பேசி அவரை அழைத்து வந்து நேற்று மாலை திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த சாமியார் பொள்ளாச்சி அருகே சோமந்துரைசித்தூரைச் சேர்ந்த மலையன் மகன் செல்வராசு (45) என்றும், அவருக்கு சுதா என்ற மனைவியும், 20 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்றும், அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்ததால் சாமியாராக மாறியதும் தெரிய வந்தது.
மேலும் அவர் பொது மக்கள் பலரிடம் மோசடியான வார்த்தைகள் கூறி பணம் பறித்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications