செல்போன் பேசியபடியே பஸ் ஓட்டினால் பார்த்த இடத்திலேயே 'சஸ்பெண்ட்'!
சென்னை: சென்னை மாநகரில் செல்போன் பேசியபடி டிரைவர்கள் யாரும் பஸ் ஓட்டக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு அவர்கள் நகர் முழுவதும் வலம் வருகின்றனர். யாரேனும் செல்போனில் பேசியதாக சிக்கினால் சம்பவ இடத்திலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 17 எம் பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கீழே விழுந்தது. இதில் 38 பேர்காயமடைந்தனர். டிரைவர் பிரகாஷ் செல்போனில் பேசியதால்தான் இந்த விபத்து நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து இன்று 2வது நாளாகவும் விசாரணை தொடர்கிறது. மேலும், செல்போனில் பேசியபடி டிரைவர்கள் யாரும் பஸ் ஓட்டக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி யாராவது பேசி சிக்கினால் சம்பவ இடத்திலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைக் கண்காணித்து செயல்பட குழு ஒன்றை அமைத்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், நகர் முழுவதும் அந்தக் குழுவை சுற்றி வர பணித்துள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications