நேர்மையாக செயல்பட்டா இப்படித்தான்.... காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விருதுநகர் ஆட்சியர் பாலாஜி
விருதுநகர்: மதுரை மாவட்டத்தில் நேர்மையான ஆட்சியராகப் பணியாற்றிய சகாயம் தூக்கி அடிக்கப்பட்டதைப் போல விருதுநகர் ஆட்சியர் பாலாஜியும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுவிட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கும் அளவுக்கு விருதுநகர் ஆட்சியர் பாலாஜி செய்த "குற்றங்கள்" என்ன தெரியுமா?
- விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார்
- புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார்
- அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார்
- மோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆப்படித்தார்
- ஒழுங்காக வேலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
- சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார்.
இப்படி "பல செயல்கள்" செய்ததால்தான் அவரை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். அரசின் இந்த நடவ்டிக்கைக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications