மதுரை சிறைக்குள் விஷமிகள் கத்திவீசியதால் பரபரப்பு
மதுரை: நாளை திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவிருக்கும் நிலையில் இன்று மதுரை மத்திய சிறைக்குள் யாரோ கத்தியை வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடக்கவிருக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டு சிறை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே இனி கட்சியிலும், ஆட்சியிலும் பதவி அளிக்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறைக்குள் யாரோ இன்று கத்தியை வீசியுள்ளனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியே இருந்து சிறைக்குள் கஞ்சா, பீடி பொட்டலங்கள் வீசியது போக தற்போது கத்தி வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications