பத்து வருஷத்துக்கு முன்னாடியே வந்திருந்தா நல்லாருந்திருக்கும்.. செல்வகணபதி ஏக்கம்!
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: அடிமைகளின் கூடாரம்தான் அதிமுக. அங்கிருந்து திமுகவுக்கு வந்த பிறகுதான் நான் நல்ல அனுபவம் பெற்றேன். பத்து வருடத்திற்கு முன்பே நான் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது திமுகவில் முக்கியப் புள்ளியாக திகழ்பவருமான செல்வகணபதி கூறியுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த செல்வகணபதி,ஊட்டியில் நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்ட விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,அதிமுக கொத்தடிமைகளின் கூடாரமாக திகழ்கிறது. அங்கு கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை.
திமுகவில் இணைந்த இந்த நான்கு ஆண்டில் கிடைத்த அனுபவம், எனக்கு அதிமுகவில் இருந்தபோது கிடைக்கவில்லை. நான் பத்து வருடங்களுக்கு முன்பே திமுகவில் இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார் செல்வகணபதி.












Click it and Unblock the Notifications