For Daily Alerts
Just In
அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அகில் கோகய் மீது கடும் தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி
நல்பாரி: சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அகில் கோகய் மீது அசாம் மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அகில் கோகய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாமில் கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அகில் கோகய் பார்வையிட்டு வந்தார். நல்பாரி மாவட்டம் தர்மாபூர் பகுதிக்கு சென்ற போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தடிகளாலும் கூர்மையான ஆயுதங்களாலும் அவரை சராமரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அகில் நல்பாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English summary
RTI activist and Team Anna member Akhil Gogoi was attacked on Friday in Dharmapur area of Nalbari district in Assam by suspected Youth Congress activists. Gogoi, was visiting Punni village in Dharmapur area to take stock of the flood situation, was allegedly attacked with sticks and sharp weapons, the police said.
Story first published: Saturday, July 7, 2012, 11:48 [IST]