எதிர்கட்சியினரை கைது செய்வதிலேயே போலீசார் குறியாய் உள்ளனர்: கருணாநிதி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரஞ்சோதி மீதான வழக்கில் ஜூலை 9ம் தேதி கண்டிப்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரிக்கும் உதவி ஆணையர் விடுமுறையில் சென்றுவிட்டதாகவும், பரஞ்சோதியின் கையெழுத்துப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் இருந்தே அதிமுகவினர் என்றால் காவல்துறையினர் எந்த அளவிற்கு நீதிமன்றத்தையும், நீதியையும், சட்ட விதிமுறைகளையும் இழுத்தடித்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications