குற்றால சாரல் திருவிழா: தோட்டக்கலைத் துறை சார்பில் பூஞ்செடிகள் கண்காட்சி
நெல்லை: குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பூஞ்செடிகள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் செலவராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சாரல் திருவிழா நடக்கும் நாட்களில் பல்சுவை நிகழ்ச்சிகள், சதுரங்கம், கோலப்போட்டிகள், நீ்ச்சல் போட்டி போன்ற போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. சாரல் திருவிழாவில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்யவும், தோட்டக்கலைத்துறையினர் மூலம் பூச்செடிகள் கண்காட்சி நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழாவுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குற்றாலத்தில் சீசன் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி அவசர கால ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பது முற்றிலும் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications