அதிமுகவுக்கு தாவிய 2 மதிமுக கரூர் நகராட்சி கவுன்சிலர்கள்
சென்னை: கரூர் நகராட்சி கவுன்சிலர்கள் சந்திரசேகரன் மற்றும் அம்பிகா ஆகியோர் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
கரூர் நகராட்சி 32வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகரன். பல ஆண்டுகளாக மதிமுகவில் இருந்து வந்தார். அதே போன்று கரூர் நகராட்சி 39வது வார்டு கவுன்சிலர் அம்பிகா. அவரும் மதிமுக உறுப்பினர் ஆவார். இந்த இருவரும் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரும் அதிமுக அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் மதிமுகவின் மாநில மாநாடு கரூரில் நடக்க உள்ளது. இந்நிலையில் கரூர் நகராட்சி மதிமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications