நாடாளுமன்றத்தில் பிரதீபா பட்டீலுக்கு உற்சாக வழியனுப்பு விழா- காணாமல்போன எம்.பிக்கள்

Subscribe to Oneindia Tamil

Pratibha Patil
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.

நாட்டின் 12-வது குடியரசுத் தலைவரான பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார். அகில இந்திய வானொலி நிலையங்களும் அவருடைய உரையை ஒலிபரப்ப உள்ளன.

முன்னதாக நேற்று நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் எம்.பிக்கள் சார்பில் உற்சாக வழியனுப்பு விழா நடைபெற்றது.

மக்களவை சபாநாயகர் மீரா குமார், குடிய்ரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரதீபா பட்டீலுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மக்களவை சாபாநாயகர் மீராகுமார், மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக பொது வாழ்க்கையை தொடங்கி நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றதன் மூலம் வரலாறு படைத்து இருக்கிறார் பிரதீபா பட்டீல் என்றார்.

வாழ்த்துகளை ஏற்று பேசிய பிரதீப் பட்டீல், நாடாளுமன்ற அமளிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வாதங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.

நாட்டின் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவருக்கு நடத்தப்பட்ட வழியனுப்பும் விழாவிலும் கூட ஏகப்பட்ட எம்.பிக்கள் ஆப்சென்ட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் சோனியாவுக்கு அருகில் எப்போதும் பிரணாப் முகர்ஜிதான் அமர்ந்திருப்பார். தற்போது அந்த இடத்தில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன்குமார் பன்சால் அமர்ந்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+