இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள அசாமுக்கு ரூ300 கோடி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
குவஹாத்தி: இனமோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மாநிலத்துக்கு ரூ300 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அசாமில் வன்முறை பாதித்த கோக்ராஜர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோரை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். மேலும் மோதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு ரூ300 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று கூறிய மன்மோகன்சிங், இனமோதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலாரூ2 லட்சம் வழங்கப்படும் என்றார். இம்மோதலில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அசாம் தலைநகர் குவஹாத்தியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் குவஹாத்தி திரும்ப நேரிட்டது. பின்னர் வேறு ஒரு ஹெலிகாப்டரில் வன்முறை பாதித்த கோக்ராஜர் மாவட்ட முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications