அசாம் சென்ற பிரதமரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறங்கியதால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Helicopter
குவஹாத்தி: அசாமில் வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட சென்ற பிரதமர் மன்மோகன்சிங்கின் ஹெலிகாப்டர் அவசரமாக குஹவாத்திக்கே திரும்பியதால் ப்ரும் பரபரப்பு ஏற்பட்டது.

அசாமில் கோக்ராஜர், சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக போடோ இனத்தவருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இம்மோதலில் 58 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்து 232 அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலமான மேற்குவங்க மாநிலத்துக்கு அகதிகளாக தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட அசாம் தலைநகர் குவஹாத்திக்கு பிரதமர் மன்மோகனிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று வந்தடைந்தனர். அங்கிருந்து கோக்ராஜர் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குவஹாத்திக்கு திரும்பிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரின் ஹெலிகாப்டர் அவசரமாகத் திரும்பியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வேறு ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் ஏறிச் சென்றதால் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

and UPA chairperson Sonia Gandhi on Saturday arrived at an airport in Guwahati and immediately left for Assam's restive district of Kokrajhar to take stock of the situation.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+