தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங்கவும் இல்லை: அன்னா ஹசாரே

டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் ஊழலுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அவர் பேசியதாவது:
தேர்தலில் எப்பொழுதுமே நான் போட்டியிடப் போவதில்லை. அதேபோல் தனியாக கட்சி தொடங்கப் போவதும் இல்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் நான் உயிர் பிழைத்து இருந்தால் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேர்மையான மனிதர்களை சந்திக்கப் போகிறேன். அப்படி நான் நேர்மையான மனிதர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களது பெயரை இணையதளத்தில் வெளியிடுவேன். அவர்களின் பெயர்களை பரிசீலித்து குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வேன். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வேன்.
பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அந்த கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
நான் உயிரோடு இருக்கும் வரை வலுவான லோக்பால் மசோதாவுக்காகப் போராடுவேன். அனைத்து நேரங்களிலும் உண்ணாவிரதம் இருப்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அரசாங்கத்தின் துரோகத்தால் இந்த முடிவுக்கு நான் தள்ளபப்டுகிறேன் என்றார்.
ஆனால் நேற்று அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், மக்கள் நான் அரசியலுக்கு வர விரும்பினால் அது பற்றி பரிசீலிப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் தேவைப்பட்டால் கட்சியைத் தொடங்குவது ஒன்றும் தவறு இல்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications