சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் அமெரிக்க மியூசியத்தில் சோதனை- கைது செய்ய பிடிவாரண்டு

தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பிரகதீசுவரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 18 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுபோல தமிழகத்திலும் கேரளாவிலும் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் கபூர் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
மேலும் அமெரிக்காவில் ஆர்ட் ஆப் தி பாஸ்ட் என்ற பெயரில் கலைப் பொருள் கண்காட்சியகத்தையும் அவன் நடத்தி வந்திருக்கிறான். அண்மையில் ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தி வரப்பட்ட சுபாஷ் கபூர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இதனிடையே அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகிற குடியுரிமை, சுங்கத்துறை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், மேன்ஹட்டன் நகரில் உள்ள சுபாஷ் கபூரின் பிரமாண்ட விற்பனை மையத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிவபெருமான், பார்வதி சிலைகள், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிலைகள், கலைப்பொருட்கள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.110 கோடி ஆகும்.
இதையடுத்து சுபாஷ் கபூரை கைது செய்ய அமெரிக்க அதிகாரிகள் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications