அன்னா குழுவினரிடையே அரசு பிளவை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை: அமைச்சர் நாராயணசாமி
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரிடையே பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை.. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அன்னா ஹசாரே குழுவினரிடையே ஏற்கெனவே ஒற்றுமை இல்லை. இதனால் அவர்களிடத்தில் பிரிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. அன்னா குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மீது தொடர்ச்சியான புகார்கள் வருகின்றனர். அவர் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது தவறு.
அமைச்சரவையில் ராகுல்
அமைச்சரவையில் ராகுல்காந்தி இணைவது என்பது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டனுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது ஒன்று. இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும்தான் முடிவு செய்வர்.
காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications