For Daily Alerts
Just In
பேரன், பேத்தி கேட்கும் கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.. எதியூரப்பா
கர்நாடக சட்டசபையில் கல்வித்துறை தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு எதியூரப்பா பேசுகையில், தற்போது ஆரம்பக் கல்வி அளவில் அரசுப் பள்ளிகளில் உள்ள கல்வியின் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது. இதனால்தான் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பி வருகின்றனர்.
தற்போது உள்ள குழந்தைகள் ஐக்யூ அளவில் மிகப் பிரமாதமாக உள்ளனர். எனவே சாதாரண முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களால் இவர்களை சமாளிக்க முடியாது. நல்ல தரமான, திறமையான, குழந்தைகளின் அறிவுப் பசிக்குத் தீனி போடக் கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
இன்றுள்ள குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு எனது பேரப் பிள்ளைகள்தான் சரியான அளவுகோல். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதிலே அளிக்க முடியவில்லை. திணறிப் போய் விடுவேன்.
Comments
English summary
Participating in a discussion in the Karnataka assembly, former Chief Minister B S Yeddyurappa said quality of education at primary level in government schools is below-par, making parents to send their children to private institutions. Yeddyurappa said the students are so bright and talented that he was not able to answer the questions posed to him by his grand-children.
Story first published: Friday, August 3, 2012, 10:34 [IST]