அர்ஜுன் 'ஒருநாள் முதல்வரானது' மாதிரி முதல்வராக நினைக்கும் விஜயகாந்த்: அழகிரி தாக்கு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டியில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்த அழகிரி அளித்த பேட்டி:
கேள்வி: மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்.
அழகிரி: இது, அந்த துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
கேள்வி: திண்டுக்கல்லில் நடந்த தேிமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தன்னை அடுத்த முதல்வர் என்று கூறியிருப்பதும், தேமுதிகவால் தான் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது என்றும் கூறியிருப்பது பற்றி...
அழகிரி: அவர் எப்போதும், தாமதமாகதான் புரிந்து கொள்கிறார். அரசியலையும் சினிமா போல் நினைக்கிறார். சினிமாவில் நடிகர் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக வந்ததை போல் அவரும் முதல்ராகிவிடலாம் என்று நினைக்கிறார்.
கேள்வி: டெசோ மாநாடு பிரபாகரன் உயிரோடு இருக்கும் போது நடத்தப்பட வேண்டியது என விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?
அழகிரி: இந்த கருத்தை அவர் அப்போதே கூறியிருக்கலாமே என்றார்.












Click it and Unblock the Notifications