For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியையின் செல்போனிலிருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய யோகா மாஸ்டர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

ஓசூர்: காஞ்சிபுரம் கல்லூரி பேராசிரியையின் செல்போனை திருடி ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய அதே கல்லூரியைச் சேர்ந்த யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பேராசிரியை கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வருகிறார். அவர் 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வந்தார். அப்போது அதே கல்லூரியில் பணியாற்றிய யோகா மாஸ்டராகப் பணியாற்றிய தங்கராஜ் என்பவருடன் அந்த பேராசிரியைக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதனிடையே அந்த பேராசிரியையின் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்ட தங்கராஜ் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அந்த செல்போன் மூலம் அந்த பேராசிரியையின் உறவினர்களுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.அனுப்பினார். இது குறித்து பேராசிரியையிடம் உறவினர்கள் கேட்டனர். அப்போதுதான் தமது செல்போனிலிருந்து தங்கராஜ் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியது தெரியவந்திருக்கிறது.

ஆனாலும் யோகா மாஸ்டர் தங்கராஜ் தொடர்ந்தும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.

English summary
The Kanchipuram yoga master was arrested for sending sms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X