தி.க. சார்பில் நாளை சென்னையில் டெசோ மாநாடு விளக்க கூட்டம்!
சென்னை: தி.க.சார்பில் சென்னையில் பெரியார் திடலில் நாளை டெசோ மாநாடு விளக்க சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தி.க. அறிவித்துள்ளது.
இது குறித்து திராவிட கழகம் சார்பில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தி.க. சார்பில் சென்னையில் டெசோ மாநாடு விளக்கச் சிறப்புக் கூட்டம் நாளை (21.8.2012), மாலை 6.30 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் (பெரியார் திடல்) நடைபெற உள்ளது. இந்த மாநாடு விளக்க பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்ற உள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுகச் சார்பில் அதன் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு நடைபெற்றது. இதையடுத்து டெசோ மாநாடு குறித்த விளக்கப் பொதுக் கூட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என்று தி.மு. அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டெசோ மாநாட்டில் கலந்து கொண்ட தி.க. தலைவர் கி.வீரமணி, டெசோ மாநாட்டு விளக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதே போல டெசா மாநாட்டில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் டெசோ மாநாடு விளக்கச் சிறப்புக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.