தூத்துக்குடியில் உ.பி. கட்டுமானத் தொழிலாளர்கள் மீது திடீர் தாக்குதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பலியா பகுதியை சேர்ந்தவர் ஹர்தேவ்சிங் கல்கத். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில், பணிகளை எடுத்து செய்து வருகிறார். அவரிடம் பலியா பகுதியை சேர்ந்த நித்தியானந்த், ராஜ், லால்ஜி, மனோகர், பால்ஜி, விஷ்கோஸ்வர், கலீல்கான், விஜய், ராம்பிரசாத் ஆகிய 9 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.அப்போது 15 பேர் கொண்ட கும்பல் கத்தி, கம்பு, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் ஹர்தேவ்சிங் கல்கத் வீட்டிற்கு வந்தது.
திடீரென அந்த கும்பல் தூங்கிகொண்டிருந்த 10 பேரையும் ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. பின்னர் தப்பி ஓடி விட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 10 தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் சிப்காட் போலீஸார் விரைந்து வந்து காயமடைந்து கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏன் இந்த திடீர் தாக்குதல் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications