சென்னை அண்ணா நகரின் அடையாளமான "அண்ணா ஆர்ச்" அகற்றம்

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3-வது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்காக அண்ணாநகர் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா ஆர்ச் எனப்படும் 2 நுழைவு வாயில் வளைவுகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
முறையாக அனைத்து துறையிடமும் அனுமதி பெற்று சனிக்கிழமை நள்ளிரவு அண்ணா வளைவுகள் அகற்றப்பட்டன. டைமன் கட்டிங் இயந்திரம், ஜே.சி.பி. மற்றும் 100 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் மூலம் இவை அகற்றப்பட்டது. வளைவு ஒவ்வொன்றும் 82 டன் எடை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக அப்பகுதிகளில் மின்சார நிறுத்தப்பட்டது. பாதுகாப்பாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு இருந்த அண்ணாசிலையும் அகற்றப்பட்டது. இதேபோல் ஆர்ச்சில் பதிக்கபப்ட்டிருந்த கல்வெட்டுகளும் அகற்றப்பட்டன.
இரு வளைவுகளும் மிகுந்த உறுதியுடன் இருப்பதால் நேற்று இரவே பணிகள் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன.
இந்த அண்ணா வளைவுகளை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications