புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடர பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்வதோடு, முன்புபோல் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரியில் இருந்து வரும் ஏழை நோயாளிகளை மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் இருந்து அங்கு போய் சிகிச்சை பெறுபவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
இது தொடர்பாக ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 2008ம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அந்த சட்ட முன்வடிவை அறிமுக நிலையிலே அதிமுக கடுமையாக எதிர்த்தது. இந்த கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போது பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று உத்தரவாதத்தை அளித்துவிட்டு மேற்கண்ட சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
இப்போது ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டணம் என்று அறிவித்திருப்பது, நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழியில் இருந்து பின்வாங்குவது போல இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சையை நிறுத்திவிட்டு, கட்டணம் வசூலிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், முன்பு போலவே அதாவது 2008ம் ஆண்டு உறுதி அளித்தது போல இலவச சிகிச்சை தொடர வேண்டும் என்றும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications