ஆதிச்சநல்லூரைப் போல முக்கூடலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பான்குளம் அருகே உள்ள பொய்யிலான் பொற்றையை ஒட்டி பறம்பு ஓன்று உள்ளது. இதில் அக்காலத்தில் பெரிய இடுகாடு இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பழங்கால தாழிகள் அதிகம் புதைந்துள்ளன. சுமார் 2 அடி விட்டமுள்ள தாழிகள் முதல் 4 அடி விட்டமுள்ள தாழிகள் வரை உள்ளன. ஒன்றினுள் ஒன்றாக 3 அடுக்குகளாக தாழிகள் உள்ளன. இவை கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகளை கொண்டவைகளாக உள்ளன.
இந்த பாறையின் ஒரு பகுதி கருஞ்சிவப்பு நிறமுடையதாக உள்ளது. மாவட்டத்தில் வேறு எந்த இடத்திலும் இந்த வண்ண பாறைகள் இல்லை. இதன் அருகே பாலிஷ் செய்யப்பட்ட கற்களும், செதுக்கப்பட்ட கோடுகள், குறியீடுகளை கொண்ட கற்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதிக கணம் கொண்ட பழங்கால செங்கற்களும் புதைந்துள்ளன.
இதன் அருமை தெரியாமல் கடந்த காலத்தில் இங்கு குவாரி அமைத்து பாறைகளை உடைத்துள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட தாழிகள் உடைநதுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட தாழிகள் வெளியே தெரிகின்றன. அனேகமாக பெரிய இடுகாடாக இது இருந்து இருக்கலாம் என தெரிகிறது. அகழ்வாய்வு செய்து பார்த்தால் பழங்கால பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications