நாமக்கல் நகராட்சியின் அலட்சியம்.. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் நடைமேடை

பயணிகள் விரைவாக செல்லும் வசதிக்காக நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நேரு பூங்கா முன்பு பல லட்ச ரூபாய் செலவில் நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலும் கிராமம் சூழ்த பகுதி என்பதால், நாமக்கல் நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் வருது செல்கின்றனர். ஒரு புறம் இருந்து மறு புறம் செல்ல பல நிமிடம் காத்திருந்து அடுத்த பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், பொது மக்களின் சிரமத்தை தவிர்க்க பேருந்து நிலையம் முன்பு நடை மேடை (பிளாட்பார்ம்) அமைக்க நாமக்கல் நகராட்சி நிர்வாகம முடிவு செய்தது. அதன்படியே நடை மேயும் அமைக்கப்பட்டது.
ஆனால், அந்த நடை மேடை முன்பு கழிவு நீர் குட்டை போல் தேங்கிக் கிடப்பாதல், அந்த இடத்தில் துர் நாற்றம் வீசுகின்றது. இதனால் அந்த பகுதிக்கு செல்லவே பொது மக்கள் பலரும் தயங்குகின்றனர். மேலும் நடை மேடையையும் பயன்படுத்த மறுக்கின்றனர். இதனால் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அந்த நடை மேடை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணமாக பலரும் கை காட்டுவது நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தைத் தான். நகராட்சி நிர்வாகம் தனது அலட்சிய போக்கை கைவிட்டு, பொது மக்கள் நலன் கருதி விரைவான நடவடிக்கை எடுத்து உதவ வேண்டு என்பது பொதுமக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications