டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு எதிரான ஜெயலலிதாவின் அவதூறு வழக்கு- மனுவை திருப்பி அனுப்பியது கோர்ட்
சென்னை: டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மாநில அரசு கொலை செய்வதற்கு டிரைவிங் லைசென்சு வழங்குகிறது என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி அவர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை பரிசீலித்த நீதிபதி, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியான செய்தியை ஆழமாக படித்து பார்த்ததில், அது முதல்வருக்கு எதிரான எந்த அவதூறு செய்தியையும் வெளியிட்டதாக தெரியவில்லை. செய்தியின் தலைப்பை வைத்து அவதூறு என்று குறிப்பிட முடியாது. எனவே இந்த செய்தி எப்படி அவதூறானது என்பதை 15 நாட்களுக்குள் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறி மனுவை திருப்பி அனுப்பி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications