கிரானைட் மோசடி: பெண் தாசில்தார் உட்பட 7 பேர் வீடுகளில் திடீர் சோதனை- முக்கிய ஆவணஙகள் பறிமுதல்
மதுரை: கிரானைட் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த மேலூர் பெண் தாசில்தார் உட்பட 7 பேர் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அளித்தார். இதனையடுத்து பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் அதிபர் பி.ஆர்.பி. உட்பட கிரானைட் அதிபர்கள், குவாரி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கிரானைட் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜி.ஜி. கிரானைட் அதிபர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து கிரானைட் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த மேலூர் தாசில்தார் ருக்மணியின் வீட்டில் (மேலூர் தெற்கு தெரு) நேற்று மாலை மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி, ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய பிரிவில் எழுத்தாளராக உள்ள ஞானசேகர், பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரியும் மேலூர் வெள்ளநாதன்பட்டியைச் சேர்ந்த அய்யனார், திருவாதவூர் மனோகரன், வேப்படைப்பு அம்பேத்கர் மற்றும் சுண்ணாம்பூரை சேர்ந்த சுந்தரம், மதுரையைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களின் பத்திர நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications