நிலக்கரி ஊழல்: 1000 காவல் நிலையங்களில் மன்மோகன் சிங் மீது புகார் கொடுக்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீது தமிழகம் முழுவதும் 1000 காவல்நிலையங்களில் புகார் கொடுக்க இருப்பதாக தமிழக பாஜகவின் இளைஞர் அணி அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் இன்று டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டு அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில பாஜகவின் இளைஞர் அணியின் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் பொன்.பாலகணபதி, நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமர் மீது தமிழகத்தில் உள்ள 1000 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications