பவர்கட் குறைஞ்சிருச்சாம்: என்னதான் சொல்ல வருது மின்சார வாரியம்?

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தற்போதைய மின்தேவை 11,500 மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவாக இருப்பதால் புனல் மின்நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் மிகவும் குறைந்துள்ளது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து பெறப்படும் தமிழ்நாட்டின் பங்கான 2,950 மெ.வா. 1,100 மெகா வாட் அளவுக்கு குறைந்து 1,850 மெகாவாட் மட்டுமே பெறப்படுகிறது. இவை அனைத்தும் தமிழகத்தின் மின் நிலைமையை வெகுவாக பாதித்து உள்ளது.
கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவில், ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருந்தது. காலை நேரங்களில் மிகவும் குறைந்தும், மாலை நேரங்களில் சற்றே அதிகரித்தும் காற்றாலை மின்சாரம் பெறப்பட்டது. கடந்த 19-ந் தேதி காலை காற்றாலை மின்சாரம் எதிர்பாராத அளவில் 100 மெகாவாட்டாக குறைந்தது.
மேலும் கடந்த 17-ந் தேதி முதல் மத்திய ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டமைப்பு இயக்க விதிகளை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. மின் அதிர்வெண் 49.8க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மின் கட்டமைப்பு பாதுகாப்பு கருதியும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அவ்வப்போது குறையும் நேரங்களில் கூடுதலாக மின்தடை செய்ய நேரிடுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து சுமார் 1,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உத்தரவு அளித்திருந்தும் மத்திய மின் கட்டமைப்பு கழகம் பிற மாநிலங்களிலிருந்து போதிய அளவு மின்பாதை அமைக்காத நிலையில் 1000 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்கப் பெறவில்லை.
மேற்கூறிய காரணங்களினால் கடந்த 19-ந் தேதி அன்று தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் 8 முதல் 10 மணி நேரமும் சென்னையில் ஒரு மணி நேரமும் மின்தடை செய்ய நேரிட்டது. எனினும் மாலை 4 மணி முதல் காற்றாலையிலிருந்து பெறப்பட்ட மின்சார அளவு அதிகரிக்க ஆரம்பித்ததும் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் நடைமுறையிலுள்ள மத்திய மற்றும் மாநில புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழ்நாட்டின் மின்நிலைமை சீரடையும்.
இவ்வாறு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12 மணி நேர மின்தடை
கடந்த 19 ம் தேதிமுதல் தமிழ்நாட்டில் மின்தடை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக மின்சார வாரியம் கூறி வருகிறது. ஆனால் கடந்த 18ம் தேதி முதலே சென்னைத் தவிர தமிழ்நாடு முழுவதும் காலை 5.30 மணி தொடங்கி 9 மணி வரையிலும், 12 மணி தொடங்கி 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 9 மணி முதல் 10 மணிவரையிலும் நள்ளிரவில் 12 முதல் 1 மணி வரையிலும், 3 முதல் 4 மணி வரையிலும் மொத்தம் 12 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க மின்சாரம் தடை செய்வதற்கு காற்றாலை உற்பத்தி குறைந்து போனதே காரணம் என்று காற்றாலைகள் மீது பழியை போட்டுவிட்டு மின்சார வாரியம் தப்பிக்க நினைப்பதாக காற்றாலைகள் சங்கத்தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியுள்ளார்.
ஆனால் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின்நிலையம், புனல் மின் நிலையம் உட்பட பல்வேறு மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 60 மில்லியன் யூனிட்டாக இருந்த மின்உற்பத்தி, தற்போது 45 மில்லியன் யூனிட்டாக குறைந்து விட்டது. அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் மத்திய தொகுப்பிலிருந்து மின்பங்கீடும் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 நாட்களுக்குதான் காற்று வீசும், அதற்கு பிறகு காற்றாலைகள் மின் உற்பத்தி இருக்காது. மின்தடை நேரம் அதிகரிக்க காரணம் என்ன என்று பொதுமக்கள் மின்வாரியத்தை கேட்டால், உடனடியாக காற்றாலைகளில் மின்உற்பத்தி குறைந்து விட்டது என்று காற்றாலைகள் மீது வீண்பழியை போடுகின்றனர் என்றும் அவர் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications