அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் இருந்து விலகிவிடமாட்டோம்: கருணாநிதி

இது தொடர்பாக நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கேள்வி: அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?
பதில்: அது அந்தந்த மாநில உரிமைகளாகும். அவரவர்கள் தங்கள் மாநில நிலைமைகளுக்கேற்ப, மக்களுடைய கருத்துக்களையும் அறிந்து, அதை ஏற்றுக் கொள்வதாக கருத்து அறிவித்திருக்கிறார்கள்.
கேள்வி: மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களா?
பதில்: எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்து, எந்த கூட்டணியிலே நாங்கள் இடம் பெற்றாலும், அந்தக் கூட்டணியிலிருந்து அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் எப்போதும் காப்பாற்றுவோம். அப்படியே காப்பாற்றி வருகிறோம். கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை.
அமைச்சரவை மாற்றம்
கேள்வி: அமைச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே தி.மு.கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க் கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல.
கேள்வி: உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: இதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிலே விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள்.
ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு
கேள்வி: இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா?
பதில்: ஒரு நாட்டின் பிரதமரையோ, அதிபரையோ வரவேற்பது என்பதும், உபசரிப்பது என்பதும் மரபுகளாகும். அந்த மரபினை இந்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்சேவின் இந்திய வருகையை தி.மு.கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் கண்டித்தும் கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல என்பது தான் தமிழ் மக்களின் கருத்து.
காவிரிநதி நீர் விவகாரம்
கேள்வி: கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுக்கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் சொல்லியும் கர்நாடக முதல்வர் தண்ணீர் கொடுக்க முடியாதென்று சொல்கிறாரே?
பதில்: இதைப் பற்றி நாங்கள் எங்களுடைய கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். கர்நாடகத்தோடு நட்பு முறையிலும், நேச மனப்பான்மையுடனும் கழகம் ஆட்சியிலே இருந்த போது கலந்து பேசி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீருக்காக நாங்கள் வாதாடியிருக்கிறோம், போராடியிருக்கிறோம். இப்போதும் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றாலும் நீதி மன்றத் தீர்ப்புகளைக் கூட அலட்சியப்படுத்துகின்ற அரசாக, கர்நாடக அரசு இருக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை. எனவே இதை விடக் கடுமையான நடவடிக்கை மூலம் அல்லது இந்திய நாட்டளவில் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்டக் கூடிய சட்டத் திட்டங்களை நிறைவேற்றுகிற வரையில் இப்படித் தான் நிலைமை இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
கேள்வி: தமிழக அரசு இந்தப் பிரச்சினையிலே முறையாக நடந்து கொண்டிருக்கிறதா?
பதில்: நான் இப்போது தமிழக அரசைப் பற்றி சொல்லவில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது நல்லது அல்ல. என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications