டிடிடிஏ கம்பெனி சொத்துக்களை சுரண்டுவதாக நெல்லை, தூத்துக்குடி பிஷ்ப்கள் மீது வழக்கு
நெல்லை: டிடிடிஏ கம்பெனி சொத்துக்களை சுரண்டுவதாக நெல்லை சிஎஸ்ஐ பிஷப் கிருஸ்துதாஸ், தூத்துக்குடி பிஷப் ஜெபசந்திரன் உள்பட 6 பேர் மீது பாளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை டயோசீஸின் டிரஸ்ட் அசோசியேஷன் நலச்சங்க செயலாளர் எர்னஸ்ட் பாலசிங் பாளை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நெல்லை சிஎஸ்ஐ பிஷப் கிருஸ்துதாஸ், தூத்துக்குடி பிஷப் ஜெபசந்திரன், முன்னாள் பிஷப் ஜெயபால் டேவிட், நெல்லை திருமண்டல நிதித்துறை இயக்குனர் ரத்தினராஜ், முன்னாள் பொருளாளர் செல்வின் ஜெயராஜ், தூத்துக்குடி திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் டிடிடிஏ கம்பெனியின் சொத்துகளை கம்பெனியின் சட்டத்திற்கு உட்பட்டு முறையாக பகிர்ந்து கொள்ளாமலும், சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் செய்து வருவதுடன் சிஎஸ்ஐ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பின் கீ்ழ், டிடிடிஏ கம்பெனிக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை கம்பெனி சட்டவிதிமுறைகளுக்கு மாறாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களின் அதிகாரத்தை மீறி யாதொரு விதிமுறையையும் பின்பற்றாமல் கூட்டு சதி செய்துள்ள அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாளை போலீசார் விசாரணை நடத்தி பிஷப் கிருஸ்துதாஸ், ஜெபசந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications