For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு 3 நாள்தான் காவிரி நீர் ... 'ஷட்டரை' மூடப் போவதாக கூறுகிறார் ஷெட்டர்!

By Mathi
Google Oneindia Tamil News

Jagadish Shettar
பெங்களூர்: தமிழகத்துக்கு 3 நாள்தான் காவிரி நீர் திறக்கப்படும் என்றும் அதற்குள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

காவிரியில் திடீரென நேற்று நள்ளிரவு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறமுடியாது. 3 நாட்களுக்கு மட்டும்தான் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும். இன்னும் 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

English summary
"We have begun releasing the water for 3 days only and will appeal to the Supreme Court for relief," Chief Minister Jagadish Shettar told reporters on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X