காவிரி: நாளை கர்நாடகா பந்த்.. மாநிலம் ஸ்தம்பிக்கப் போகிறது.. பெங்களூரில் பதற்றம்-பீதி

பந்துக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது.
அதே போல பெங்களூரில் அரசு பஸ்களும் முழு அளவில் இயங்காது என்றே தெரிகிறது. அரைகுறை சர்வீஸ்களே இருக்கும். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்தால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வர்த்தக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மார்க்கெட்டுகள் ஏதுவும் திறக்கப்படாது.
சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கமான விடுமுறை இருக்கும். அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள் ஏதும் இயங்காது. ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்பதால் விமான நிலைய டாக்ஸிக்கள் இயக்கும் என்று அறிவித்துள்ளனர். ஆனாலும் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அவையும் வாபஸ் பெறப்படும் என்றும் டாக்ஸி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை நடக்கவுள்ள அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்யுமாறு கல்லூரிகளுக்கு பெங்களூர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பந்த் தமிழர்களுக்கு எதிரான போராட்டமாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம் தமிழர்களிடையே நிலவுகிறது.
பந்த்தையொட்டி பெங்களூரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பதற்றமான பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்படவுள்ளனர். இந்தப் பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
பெங்களூரில் மட்டும் 17.000 போலீசாரும், 3 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், அதிரடிப் படையினரும், 25 பிளாட்டூன் கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினரும், 35 பெங்களூர் ரிசர்வ் போலீஸ் படை பிளாட்டூன்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
நாளை பந்த் நடக்கும்போது விதானசெளதா, கே.ஆர்.ரோடு, கே.ஜி. ரோடு, ஜே.சி.ரோடு, அம்பேத்கர் வீதி, பேலஸ் ரோடு, சேஷாத்ரி ரோடு போன்ற சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு பெங்களூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பந்த்தையொட்டி நாளை தமிழகத்திலிருந்து எந்தப் பேருந்தும் பெங்களூருக்கோ, கர்நாடகத்தின் மற்ற நகரங்களுக்கோ இயக்கப்படாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications