ஓடும் காரிலிருந்து மனைவியை நடுரோட்டில் தள்ளிய கணவர்: சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் சைக்கோ கணவர் ஒருவர் ஓடும் காரில் இருந்து மனைவியை நடுரோட்டில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேடு தெற்கு கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஏஞ்சலின் புனிதா (29) வியாழக்கிழமையன்று ராஜ்குமாரும், புனிதாவும் காரில் பெசன்ட்நகர் எலியாட்ஸ் கடற்கரைக்கு சென்றனர். பிறகு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். பின்னர் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சைக்கோ கணவர்
ராஜ்குமார் சைக்கோ குணம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. திடீரென காருக்குள் கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜ்குமார் மனைவியை தாக்குவதற்காக காருக்குள் தயாராக வைத்திருந்த கல்லை எடுத்து ஏஞ்சலின் புனிதாவை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த புனிதா தப்ப முயன்றார். ஆனால் கார் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அவரால் தப்ப இயலவில்லை.
நடுரோட்டில் தள்ளினார்
கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால், அவர் போட்ட கூச்சல் வெளியில் கேட்கவில்லை. ஓடும் காருக்குள் மனைவியை தாக்கியபடி வந்த ராஜ்குமார், தி.நகர் பாண்டி பஜார் பகுதியில் காரில் இருந்து புனிதாவை கீழே தள்ளி விட்டார். ஓடும் காரில் இருந்து கீழே விழுந்ததால் புனிதா பலத்த காயம் அடைந்தார். இதனை அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிட காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவர் இதுபற்றி கூறினார். அதற்கு போலீசார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருப்பினும் அந்த காவலாளி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் வந்தவர்கள் புனிதாவை மீட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே ஓடும் காரில் இருந்து மனைவியை தள்ளிவிட்டது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். மனைவியை தள்ளிவிட்டுவிட்டு தலைமறைவாகி விட்ட ராஜ்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications