என்.ஆர்.ஐகளுக்கும் வாக்குரிமை தேவை... நியூயார்க்கில் அத்வானி பேச்சு

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தைப் பார்வையிட அத்வானி தலைமையில் இந்திய எம்.பிக்கள் குழு நியூயார்க் சென்றுள்ளது. இந்த நிலையில் நியூஜெர்சி பாஜக ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அத்வானி.
அப்போது அவர் பேசுகையில்,
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கவே விரும்புகிறார்கள். அதற்கான முயற்சியும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இந்தியர்களும் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஒட்டுரிமை பெறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு சட்டங்களில் மாற்றங்கள் இருக்கிறபோது மட்டுமே இதை நாம் கொண்டுவர முடியும்.
இந்தியாவில் தேர்தல் கமிஷன் தன்னாட்சியுடனும் ராணுவம் அரசியல் அமைப்பு சட்டப்படியும் செயல்படுவதனால் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது என்று மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கூறியதையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications