சட்ட மாணவியை பலாத்காரம் செய்த 8 பேர் கும்பல்.. பெங்களூரில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil

இந்த மாணவி 2வது ஆண்டு படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு இந்த மாணவி தனது நண்பருடன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அந்த மாணவியை வழிமறித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தக் கொடும் செயல் தொடர்பாக அந்த மாணவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அந்த மாணவிக்கு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தினர். மேலும் 8 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.
நாட்டின் மிகப் பிரபலமான பெங்களூர் தேசிய சட்டக் கல்லூரி வளாகம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications