கத்காரிக்கு எதிரான ஆதாரமாக கேஜ்ரிவால் காட்டிய விவசாயி திடீர் மாயம்!
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கத்காரியால் பாதிக்கப்பட்டதாக அரவிந்த் கேஜ்ரிவாலால் கூறப்பட்ட விவசாயி கஜானன் கட்கே மாயமாகி விட்டார். அவரை நேற்று காலை முதல் காணவில்லை என்று அவரது மனைவி கூறியுள்ளார்.
இருப்பினும் 50 வயதான கட்கே, மீடியாக்களின் தொடர் அழுத்தத்திற்குப் பயந்தே தலைமறைவாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
நேற்று அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கத்காரியின் ஆட்கள், கஜானனையும், அவரது மனைவியையும் மிரட்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்தின்போது மகாராஷ்டிராவில் 100 ஏக்கர் விவசாய நிலத்தை தனது சுயநலனுக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் வளைத்துப் போட்டு விட்டார் கத்காரி என்று கூறியிருந்தார் கேஜ்ரிவால் என்பது நினைவிருக்கலாம். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளில் கஜானனும் ஒருவர் என்று கூறியிருந்தார் கேஜ்ரிவால். அந்த விவசாயியைத்தான் தற்போது காணவில்லை.












Click it and Unblock the Notifications