3 அமைச்சர்களின் "சைடு சேனல்கள்" பற்றி செய்தி: கருணாநிதியை "அழைக்கிறது" நீதிமன்றம்
சென்னை: தமிழக அமைச்சர்கள் மூவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை "அழைத்திருக்கிறது" நீதிமன்றம்!
தமிழக அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால், கோகுல இந்திரா ஆகியோர் பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதியன்று முரசொலி நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதுதான் கருணாநிதியை நீதிமன்றத்துக்கு இப்போது "அழைக்க" காரணமாகியிருக்கிறது!
அப்படி என்ன முரசொலியில் எழுதியிருந்தார்கள்?
"23.8.2012 அன்று முரசொலி பத்திரிகையில் கருணாநிதியின் கேள்வி-பதில் என்ற செய்தி வெளியானது. அதில், வாரப்பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில், பதவி பிரமாணம் குடும்பத்தலைவர் ஏற்றுக்கொண்டாலும், குடும்ப உறுப்பினர்கள் மூலம் பைல்களை க்ளியர் செய்வது நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதியின் தம்பிகள் இரண்டு ஓட்டல்களில் உட்கார்ந்து கொண்டு துறை விஷயங்களை டீல் செய்கிறார். வனத்துறை அமைச்சர் பச்சைமாலுக்கு அவரது மனைவிகள் மற்றும் கோகுல இந்திராவுக்கு அவரது கணவரும்தான் சேனல்கள்' என்று எழுதப்பட்டுள்ளது".
அதாவது வாரப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி கருணாநிதி- கேள்வி பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். அதுதான் இப்போது 'அவதூறாகி' நீதிமன்ற அழைப்புக்கும் காரணமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications