அதிபர் தேர்தல்.. .ஓட்டுப் போட்டார் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர்6-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஒபாமாவும் அவரை எதிர்த்து குடியரசு
கட்சியின் சார்பில் ரோம்னியும் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே ஒருவர் தமது வாக்கை செலுத்த முடியும். இதனடிப்படையில் தேர்தலுக்கு 12 நாட்களுக்கு முன்பே சிகாகோவில் ஒபாமா இன்று வாக்களித்தார். இதற்காக தமது தேர்தல் பிரச்சாரத்தை 48 மணி நேரம் நிறுத்தி வைத்த்தார் அவர். இன்று காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போடடியிடுபவர் யாரும் இதுவரை முன்னதாக வாக்களித்தது இல்லை. ஒபாமா மனைவி மிச்செல் ஏற்கனவே 16-ந் தேதி வாக்களித்திருந்தார்.
இதற்கிடையே, ஒபாமாவுக்கு முன்னாள் ராணுவத் தளபதி காலின் பாவல் ஆதரவு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications