கேரளாவில் 300 டன் வெடிப்பொருள் பறிமுதல்- தென் மாநிலங்களை சீர்குலைக்க சதியா?
நெல்லை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஓட்டி தென் மாநிலங்களில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களில் பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட சில அமைப்பினர் முயல்வதாகவும், அதற்கு கேரளாவில் வெடி மருந்துகள் சேமிக்கப்படுவதாகவும், சிலருக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கேரளாவில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களை ஓட்டிய குவாரிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையில் 2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 20 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர்களிடம் விசாரித்த போது எங்கிருந்து, எங்கு செல்கிறது என்று தெரியாது என்று, அவ்வப்போது வரும் தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வாங்கி செல்வோம் என்றனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பல்வேறு குவாரிகள் மற்றும் முக்கிய இடங்களில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 300 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்துகளை கைப்பற்றினர். அமோனியம் நைட்ரேட், வெடிஉப்பு கலந்த கலவையால் செய்யப்படும் வெடிகுண்டுகள் கல் குவாரிகளில் மலையை உடைக்க, கிணறுகளில் பாறையை உடைக்க பயன்படுத்தலாம்.
அதேபோல அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தில் டீசல், அல்லது மண்ணெண்ணை பயன்படுத்தினால் அது பயங்கரமாக வெடித்து பயங்கர சேதத்தை ஏற்படுத்தும். கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளது.
இதனால் கேரள எல்லையோர பகுதிகளான களியாக்கவிளை, புளியரை, குமுளி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications