ஆண்களை மயக்கும் பலான பேச்சின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த பிபிஓ!
டெல்லி: டெல்லி அருகே நொய்டாவில் இயங்கி வந்த ஒரு பிபிஓ மையத்தின் பொது மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மையத்தின் பொது மேலாளர் ஆண்களை மயக்கும் தொலைபேசிப் பேச்சின் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் சம்பாதித்துள்ளார். மேலும் பெண்களை வைத்து பாலியல் தொழிலையும் இவர் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் தவிர, ஒரு பெண் உள்ளிட்ட 3 ஊழியர்களும் கைதாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஒரு பிபிஓ நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த கும்பலிடம் சிக்கி ஏமாந்தவர்களில் சஞ்சய் குப்தா என்பவரும் ஒருவர். இவர் ஒரு வாட்ச்மேன். இவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதை நம்பி தொடர்பு கொண்டு பெரும் பணத்தை இவர் இழந்து விட்டாராம்.
அதுகுறித்து குப்தா கூறுகையில், என்னை ஒரு பெண் தொடர்பு கொண்டு பேசி உன்னிடம் பழக வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நான் அவருடன் பேசியபோது எனனை மயக்கும் வகையில் அவர் பேசினார். தினசரி பல மணி நேரம் என்னுடன் அவர் பேசுவார். அவரது பேச்சில் மயங்கிய நான் பெருமளவிலான பணத்தை அவரது வங்கிக் கணக்குக்கு போட்டேன். என்னுடன் உறவு கொள்வதாக அவர் உறுதியளித்ததால் அதை நம்பி பணத்தைப் போட்டேன். ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் நான் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீஸில் புகார் கொடுத்தேன் என்றார்.
இந்த மையத்தில் பல கல்லூரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்து அவர்களை வைத்து மயக்கும் மொழி பேச வைத்து பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தப் பெண்களுக்கு ஒரு மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் பேச ரூ. 20 கட்டணம் கொடுத்துள்ளனர். மேலும், 200 மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் அவர்கள் பேசினால் சிறப்புப் பணமாக ரூ. 6000 கொடுத்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பேசினால் அவர்களுக்குப் பணம் தரப்பட மாட்டாதாம்.
வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் உண்டு. முதல் நிமிடத்திற்கு ரூ. 30 கட்டணமாம். அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 ரூபாயம்.
மிகப் பெரிய அளவில் இதுபோல செய்து பெரும் பணத்தை இந்தக் கும்பல் சுருட்டியுள்ளதாம். இந்த கொள்ளைச் செயலில் டெலிபோன் நிறுவனத்திற்கும் பெருமளவில் பணம் போயுள்ளது. அதாவது அவர்களுக்கு 60 சதவீத பணம் போயுள்ளதாம். மீதமுள்ள பணத்தை இந்த நிறுவனம் எடுத்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications