பெங்களூர் பெயிண்ட் நிறுவனத்தில் பயங்கர தீ: 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி மற்றும் எல்க்ட்ரானிக் சிட்டிக்கு நடுவில் உள்ள காரபாளையாவில் ஒரு பெரிய பெயிண்ட் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இன்று காலை 11 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது நல்ல வேளையாக நிறுவனத்திற்குள் ஊழியர்கள் யாரும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 24 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ ஜுவாலைகள் வெகு தூரத்தில் இருந்து கூட பார்க்கும் அளவுக்கு இருந்தது. அந்நிறுவன குடோனில் ரசாயனங்களும், பெயிண்ட்டும் வைக்கப்பட்டிருந்ததால் தான் தீ பயங்கரமாக எரிந்துள்ளது.
இந்த விபத்தில் யாரும் உயிர் இழந்ததாக தகவல் இல்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications