மனைவியை ஏமாற்றிய டிவி நிருபர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்: 200 பேர் கைது
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மனைவியை ஏமாற்றிய டிவி நிருபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில வருடங்களுக்கு சன் டி.வி.யில் க்ரைம் நிருபராகப் பணியாற்றியவர் சாய்காவியன் என்ற இப்ராம் ஷா. இவருக்கும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் காஞ்சனாவிற்கும் கடந்த 2006 அக்டோபர் மாதம் 27-ந் தேதி சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, வரதட்சணையாக 100 பவுன் நகையும், 25 லட்சம் ரூபாய் செலவில் மாதவரத்தில் இரு சக்கர ஷோரூம் ஒன்றும் காஞ்சனாவின் குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு 5 வயதில் தீபேஷ் என்ற மகன் உள்ள நிலையில், திடீரென சாய்காவியன் மாயமானார். இதையடுத்து அவரை பற்றி காஞ்சனா விசாரித்தபோது, ஆலங்குடியை சேர்ந்த கனியாத்தா என்பவரது மகன் இப்ராகிம்ஷா என்றும் அவர் தனது பெயரை சாய்காவியன் என்று மாற்றி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் சாய்காவியனின் அக்காள் கணவர் நிஜாம் என்பவர் தன்னிடம் 75 பவுன் நகைகளை வாங்கி சென்றபோது அவருடன் சென்ற சாய்காவியன் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று புகார் கூறியுள்ள காஞ்சனா, கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கணவரை தேடி ஆலங்குடிக்கு வந்தார். அவருடன் மகன் தீபேஷ், தாய் தனலட்சுமி, தங்கை ஹேமாவதி, தங்கையின் கணவர் சங்கர் ஆகியோர் அவருடன் சென்றனர்.
சாய்காவியன் பற்றி அவரது வீட்டிற்கு சென்று காஞ்சனா விசாரித்தார். சரியான பதில் எதுவும் அவர்கள் கூறவில்லை. இந்த நிலையில் சாய் காவியன் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து சாய்காவியன் வீட்டு முன்பு அமர்ந்து ஒருவாரம் தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார் காஞ்சனா. பின்னர் ஆலங்குடி காவல்நிலையத்தில், காஞ்சனா அளித்த புகாரின் பேரில் இப்ராம்ஷா, அவரது பெற்றோர் இப்ராஹிம் (65), அலிமாம்மாள் (60), உறவினர் நிஜாம்மைதீன் (46) ஆகியோர் மீது ஆலங்குடி மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வந்தனர்.
ஒருமாதத்திற்கு மேலாகியும் காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications