மோசடியாக 1000 மார்பக அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் சஸ்பெண்ட்...!
லண்டன்: 1000 மார்பக அறுவைச் சிகிச்சைகளைச் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த இயான் பீட்டர்சன் என்ற டாக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட பெண்களின் மார்பகத்திலிருந்து சதைப் பகுதியை அவர் எடுத்ததாகவும், ஆபரேஷன் என்ற பெயரில் பல பெண்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தியதற்காகவும் அவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
இவரது ஸ்பெஷாலிட்டியே, பெண்களின் மார்பகங்களை அழகுபடுத்தி அவர்களுக்கு அழகான கிளீவேஜை ஏற்படுத்தித் தருவதுதான். குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இவரிடம் மார்பக திருத்த ஆபரேஷன்களை செய்துள்ளனர். இதுபோல கிட்டத்தட்ட 1000 மார்பக ஆபரேஷன்களை இந்த டாக்டர் செய்துள்ளார். கூடவே இப்படி திருட்டுத்தனமாக மார்பக சதையை எடுத்ததால் தற்போது வழக்கில் சிக்கி விட்டார்.
450 பெண்களிடம் இவர், உங்களுக்கு புற்றுநோய் கட்டிகள் இருக்கலாம் என்று மோசடியாக கூறி திருட்டுத்தனமாக சதைப் பகுதியை வெட்டி எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவரை விரைவில் போலீஸார் விசாரிக்கவுள்ளனர். விசாரணை முடியும் வரை இவர் மருத்துவத் தொழில் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கொண்ட 700 பெண்களிடம் அதைப் போக்குவதாக கூறி ஏதோ ஒரு டெக்னிக்கைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்துள்ளாராம். இதனால் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்.
இவரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள் தற்போது இழப்பீடு கோரி வழக்குப் போட்டுள்ளனர். இவரது டெக்னிக்கே, தன்னை அணுகும் பெண்களிடம் உங்களது கிளீவேஜை அழகுபடுத்துகிறேன் என்று கூறி மடக்குவாராம். பின்னர் ஆரோக்கியமாக உள்ள பெண்களிடம் தேவையில்லாமல் ஆபரேஷன் செய்து தசைப் பகுதியை அகற்றி விடுவாராம்.
மேலும் இவர் கொடுத்த டேமாக்ஸிபென் என்ற மருந்தால், பலருக்கு முன்கூட்டியே மாதவிடாய் நின்று போய் விட்டதாம்.












Click it and Unblock the Notifications