கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை எரிக்க எப்போது கிடைக்கும் அனுமதி?

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் கடந்த செப்டம்பர் 18-ந் தேதியன்று முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிக்கு அனுமதி கொடுத்தது. கடந்த அக்டோபர் 2-ந் தேதியன்று யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது.
இது தொடர்பான அறிக்கையை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்து அதிகாரிகள் இந்திய அணுசகதி கார்ப்பரேஷன் அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த அறிக்கை திருப்திகரமாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகான அனுமதியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கொடுக்கும்.
இந்த அனுமதி கிடைத்த பிறகு யுரேனியம் எரிபொருளை எரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இரண்டு ஜெர்மனி வல்லுநர்கள், கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்துவிட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications