ஆந்திராவில் உள்ள காலனி ஒன்றுக்கு ஆங் சான் சூகி பெயர் சூட்டிய மக்கள்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் காலனி ஒன்றுக்கு மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்காக போராடும் அவரை கௌரவிக்கும் வகையில் அக்கிராமத்தில் உள்ள ஒரு காலனிக்கு ஆங் சான் சூகி பெயரை வைத்துள்ளனர். காலனிக்கு தனது பெயரை வைத்த கிராமத்தினருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அவர் கிராமத்தினரிடம் கூறுகையில்,
எனது பெயருக்கு விசித்திரமான வெற்றிகளின் தொகுப்பு என்பது பொருள். வெற்றி தானாக வராது. அதற்காக பாடுபட வேண்டும். உங்களுக்கும் விசித்திரமான வெற்றிகள் கிட்டும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
சூகி கூறியதை அங்கு வந்திருந்த ஆந்திர மாநில வருவாய்த்துறை அமைச்சர் என்.ரகுவீர ரெட்டி கிராமத்தினருக்கு தெலுங்கில் மொழிபெயர்த்துக் கூறினார். அப்போது அவர், சூகி 25 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இருந்ததையும் எடுத்துக் கூறினார்.












Click it and Unblock the Notifications