சென்னைக்கு அருகே புயல் சின்னம்- தமிழகம், புதுவை துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்!

Subscribe to Oneindia Tamil

Satellite Image Nov 19
சென்னை: வங்கக் கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

புதிய புயல் சின்னம்

சென்னைக்கு வடகிழக்கில் 1000 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தற்போது சென்னைக்கு அருகே 800 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆந்திரத்தின் தென்கடலோரம் மற்றும் வடதமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் நாளை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

நிலம் புயல்

அந்தமான் கடலில் உருவான தாழ்வு மண்டலம் நிலம் புயலாக மாறி தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டி ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களை பதம் பார்த்திருந்தது. தமிழகத்தில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நிலம் புயலில் மூழ்கிப்போனது. பலர் உயிரிழந்தனர். ஒடிஷா கடலோர மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

எச்சரிக்கைக் கூண்டுகள்

இந்நிலையில் புதிய புயலை எதிர்கொள்ளும் வகையில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தூத்துக்குடி, பாம்பன், நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. புதுச்சேரி துறைமுகத்திலும் 1- ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போதைய புயல் சின்னத்தால் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+